ஆஸியில் 12 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட புலம்பெயர் இலங்கையர்!

ஆஸியில் 12 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட புலம்பெயர் இலங்கையர்!

அவுஸ்திரேலிய குடிவரவு தடுப்புமுகாமில் கடந்த 12 ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளரான ராஜன் என்பவர் நேற்று (23) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Leukaemia- புற்றுநோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த ராஜனை, முகாமிலிருந்து விடுதலை செய்யவேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

மெல்பன் குடிவரவு இடைத்தங்கல் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு community detention-சமூகத்தடுப்பில் வாழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் தன்னிடம் பேசிய ராஜன் தெரிவித்ததாக, அகதிகள் செயற்பாட்டாளர் திருமதி சாரதா ராமநாதனிடம் தெரிவித்தார் என்று SBS தமிழ் செய்தி வௌியிட்டுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image