அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு கிடைக்கவில்லை

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு கிடைக்கவில்லை

அரசால் வழங்குவதாக கூறப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு

வடமத்திய மாகாண உத்தியோகத்தர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை எ ஒன்றிணைந்த பயிற்சியாளர் ஒன்றியம் மற்றும் ஒன்றிணைத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஒன்றிணைந்த பயிற்சியாளர் ஒன்றியம் மற்றும் ஒன்றிணைத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் ஆகியன நேற்று முன்மதினம் (22) கண்டியில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியது.

இதன்போது கருத்து தெரிவித்த அதன் முக்கிய உறுப்பினர் தென்னே ஞானாநந்த தேரர் மேற்கண்ட விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே, அவசரமாக அக் கொடுப்பனவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்க கோரிக்கை விடுத்துள்ளதுடன், பட்டதாரி பயிலுனர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image