இணக்கப்பாடுகளை நிறைவேற்றுவதில் தாமதம்: சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு

இணக்கப்பாடுகளை நிறைவேற்றுவதில் தாமதம்: சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு

பல கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று (13) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டணி தீர்மானித்துள்ளது.

கோரிக்கைகளுக்கு அரசு உரிய பதில் அளிக்காவிட்டால் எதிர்வரும் 22ம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என கூட்டணியின் இணை ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றன.
 
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை தமக்கும் வழங்க வேண்டுமெனக் கோரி பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தன.

இந்த நிலையில் தமது கோரிக்கை நிறைவேற்றப்படாமையினால் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image