பரீட்சை விடைத்தாள் மதிப்பிடும் ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

பரீட்சை விடைத்தாள் மதிப்பிடும் ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 (2023) க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் பங்கேற்ற பரீட்சகர்களுக்கு ரூ. 1,450.00 இலிருந்து ரூ. 2,000.00 வரையில் அதிகரித்து வழங்கப்பட்ட இணைந்த கொடுப்பனவை 2023 (2024) க.பொ.த (உயர்தர) பரீட்சையின் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கும் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

மேலும் மதிப்பீட்டுப் பணிகளில் பங்கேற்கும் தலைமைக் கட்டுப்பாட்டுப் பரீட்சகர்கள், இணைக் கட்டுப்பாட்டுப் பரீட்சகர்கள், தலைமைப் பரீட்சகர்கள் மற்றும் மேலதிக தலைமைப் பரீட்சகர்களின் ஒட்டுமொத்தப் பணிகளுக்காகவும் 2022 (2023)  க.பொ.த. (உயர்தர) பரீட்சை மதிப்பீட்டின் போது திருத்தம் செய்து வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை 2023 (2024) க.பொ.த (உயர்தர) பரீட்சையின் மதிப்பீட்டு பணிகளுக்கு வழங்குவதற்கும் அனுமதி கிடைத்துள்ளது.

அதன்படி, 2023 (2024) க.பொ.த.(உயர்தர) பரீட்சையின் மதிப்பீட்டுப் பணியாட்டொகுதிக்கு மேற்படி திருத்தப்பட்ட கொடுப்பனவுகளை வழங்குவதற்கு இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image