நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள் பணிப்புறக்கணிப்பு

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள் பணிப்புறக்கணிப்பு

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் நிபுணர்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அறிவித்துள்ளது.

 
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
08.01.2024 அன்று கூடிய அமைச்சரவை, மருத்துவ அதிகாரிகளுக்கு பொருளாதார நிவாரணம் வழங்குவதற்காக ரூ.35000/- உதவித்தொகை வழங்கியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எவ்வாறாயினும், அனைத்து சுகாதார நிபுணர்களுக்கும் அமைச்சரவை நிவாரணம் வழங்கத் தவறியமை குறித்து நாங்கள் மிகவும் வருத்தமடைகிறோம்.
 
அதனடிப்படையில், சுகாதார நிபுணர்களுக்கு பொருளாதார நீதியை வழங்குவதில் மருத்துவ நிபுணர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிராக 09.01.2004 அன்று காலை 8.00 மணி முதல் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க  தீர்மானித்துள்ளது.
 
மேலும், இவ்விடயம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி நீதி வழங்கப்படாவிடின் அனைத்து சுகாதார நிபுணர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்களை ஒன்றிணைத்து தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க நேரிடும் என மேலும் தெரிவித்துக் கொள்கின்றோம். - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image