நோர்வூட் - தலவாக்கலை உப பிரதேச செயலகங்கள் பிரதேச செயலகங்களாக தரமுயர்வு

நோர்வூட் - தலவாக்கலை உப பிரதேச செயலகங்கள் பிரதேச செயலகங்களாக தரமுயர்வு

நுவரெலியா மாவட்டத்தில், தலவாக்கலை உப பிரதேச செயலகம், நோர்வூட் உப பிரதேச செயலகம் என்பன பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.


புதிய பிரதேச செயலகங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (29) நடைபெற்றது.

நல்லாட்சி அரசாங்கத்தினால் நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களை அமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் பிரதேச செயலகங்களுக்கு பதிலாக உப பிரதேச செயலகங்களே ஸ்தாபிக்கப்பட்டன.

இந்நிலையில், தலவாக்கலை உப பிரதேச செயலகம், நோர்வூட் உப பிரதேச செயலகம் என்பன பிரதேச செயலகங்களாக இன்று தரமுயர்த்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வுகளில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன், நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட, அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்ற செயலாளர்கள், கிராம, சமூர்த்தி, நலன்புரி ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள், இ.தொ.காவின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ், தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், உப தலைவர் பிலிப்குமார், முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

May be an image of 8 people

May be an image of 4 people, temple and text

May be an image of 5 people, temple and text

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image