பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி

பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி

பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களுக்கு தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,

“பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களுக்கு தொழிற்கல்வியைக் பெற்றுக்கொடுப்பதற்காக, அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

நாட்டில் காணப்படுகின்ற தொழில் தேவைகளுக்கு ஏற்றவாறு தங்களது பிள்ளைகளை தொழிற்கல்வி ஊடாக தகுதியுடையவர்களாக மாற்றுவதற்கு பெற்றோர் வழிகாட்ட வேண்டும்.

தொழில் தகுதியுடையவர்களாக பிள்ளைகளை மாற்ற வேண்டுமாயின், முதலில் பெற்றோரிடத்தில் மாற்றம் வர வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

மூலம் - தினகரன்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image