ரயில் இயந்திர சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு - பல ரயில்கள் ரத்து!

ரயில் இயந்திர சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு - பல ரயில்கள் ரத்து!

ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தினால் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதால் அலுவலக ரயில் உட்பட பெரும் எண்ணிக்கையான ரயில்கள் இன்று (13) ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹவயிலிருந்து கொழும்பு மற்றும் மொரட்டுவை வரையிலான பிரதான ரயில் வீதியில் இயங்கும் அனைத்து அலுவலக ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதான ரயில் போக்குவரத்தில் இயங்கும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் கரையோர ரயில் போக்குவரத்தில் ஈடுபடும் பல அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் காலியில் இருந்து மருதானை வரை செல்லும் சமுத்திராதேவி ரயில் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image