தேசிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்கங்கள்!

தேசிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்கங்கள்!

இலங்கை அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த தேசிய போராட்டத்தை முன்னெடுக்க பல தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் தீர்மானித்துள்ளன.

தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி இந்த போராட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை மக்களால் அதிகளவான வரிகள் செலுத்தப்படுகின்ற போதிலும் பெறப்படும் நன்மைகள் தொடர்பில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் (FUTA) தலைவர் பேராசிரியர் ஷ்யாமா பன்னெஹேகா கவலை வெளியிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image