பரீட்சைகள் திணைக்களம் ஆசிரியர்களுக்கு விசேட அறிவித்தல்

பரீட்சைகள் திணைக்களம் ஆசிரியர்களுக்கு விசேட அறிவித்தல்

2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர் தெரிவுக்காக, இணையவழி முறைமையில் மாத்திரம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21ஆம் திகதிவரை இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, விண்ணப்பதாரர்கள், பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்துக்குப் பிரவேசித்து விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க முடியும்.

அத்துடன், பரீட்சைகள் திணைக்களத்தின் தொலைபேசி செயலி ஊடாகவும் விண்ணப்பிக்க முடியும்.

இது குறித்து மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள 0112 785 231 அல்லது 0112 785 216 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு, பாடசாலை பரீட்சைகள் பிரிவைத் தொடர்புகொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறியப்படுத்தியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image