கட்டாய ஓய்வு பெறும் வயது மருத்துவ மற்றும் பொறியியல் துறைக்கும் பொருந்தும்!

கட்டாய ஓய்வு பெறும் வயது மருத்துவ மற்றும் பொறியியல் துறைக்கும் பொருந்தும்!

கட்டாய ஓய்வுபெறும் வயதை 60 ஆகக் குறைக்கும் தீர்மானம் மருத்துவம், தாதியர், பொறியியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும் என்று பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

த மோர்னிங் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயதுன்ன, இந்த முடிவு அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும் என்றாலும், ஆலோசகர்கள் போன்ற சில பதவிகளை வகிப்பவர்கள் வேறுபட்ட ஏற்பாட்டைப் பெறலாம், ஆனால் தனிப்பட்ட ரீதியாக சந்தர்ப்பத்துக்கு அமைய தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், அரச உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 வயது வரை குறைத்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அரச ஊழியர்கள் தமது ஓய்வூதியத்திற்காக உடனடியாக விண்ணப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தின் காரணமாக வருடாந்தம் ஓய்வு பெறவிருந்த 18,000 ஓய்வூதியதாரர்களின் மொத்த எண்ணிக்கை 20,000-25,000 ஆக அதிகரிக்கும், ஏனெனில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பொதுச் சேவையில் இருப்பவர்கள் 2022 இறுதிக்குள் கட்டாய ஓய்வுக்கு அனுப்பப்படுவார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அரச மற்றும் அரை அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆகக் குறைக்க முன்மொழியப்பட்டது.

முன்னதாக, பொதுத்துறை ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 65 ஆகவும், அரை அரசு ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 62 ஆகவும் உயர்த்த அரசு முடிவு செய்தது.

தற்போது 60 வயதுக்கு மேல் அரசு மற்றும் அரை அரசுத் துறைகளில் பணிபுரிபவர்கள் 31 டிசம்பர் 2022-ல் ஓய்வு பெறுவார்கள்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image