ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அரச அடக்குமுறை- நாடு முழுவதும் போராட்டம்!

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அரச அடக்குமுறை- நாடு முழுவதும் போராட்டம்!

அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அரசாங்கம் திணிக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று (09) நாடு பூராவும் பல எதிர்ப்புரை்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நாட்டின் பிரதான நகரங்களில் முன்னெடுக்கப்படும் இவ்வெதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒன்றிணைந்த மக்கள் திட்டம், தொழிற்சங்க தொடர்பாடல் மத்திய நிலையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

'தேசிய எதிர்ப்பு' என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வார்ப்பாட்டங்களாவன, அநுராதபுரம், தம்புல்ல, ஹுங்கம, கட்டுபெத்த, கந்தளாய், பலங்கொட, கேகாலை, பிலியந்தல, மஹியங்கன, கெகிராவ, கலவான, பேராதனை, மாரவில, திரப்பன, மெதவச்சி, செவனகல, வெல்லவாய, மாத்தளை, ஹொரன மற்றும் மஹாரகம ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தினையொட்டி பேரணி மற்றும் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் தற்போது தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு அழுத்தம் வழங்குவதும் இப்போராட்டத்தின் பிரதான நோக்கமாகும். இப்போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பல்வேறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்புத் தரப்பினரும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image