கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்ற அதிகாலையில் நடவடிக்கை!

கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்ற அதிகாலையில் நடவடிக்கை!

ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அவ்விடத்தில் இருந்து அகற்ற பாதுகாப்புத் தரப்பினர் இன்று (22) அதிகாலை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதிகாலை 1.30 மணியளவில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு படையினர் அறிவிப்பு விடுத்துள்ளதுடன் தொடர்ந்து அதற்கான நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளனர்.

கோட்டாகோகம பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களால் அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களை அகற்ற பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்தபோது இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் 9 பேர் கைது செய்யப்பட்டதுடன் காயமடைந்த இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஜனாதிபதி செயலக நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் பொது அமைதியை பேணுவதற்கான விதிமுறைகளை விசேட வர்த்மானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Galleface1.jpgGalleface3

Galleface5

 படங்கள் - சமூகவலைத்தளம்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image