குடியல்வு ஊழியர்களின் பகிஷ்கரிப்பு- முடங்கியது கட்டுநாயக்க விஐபி பகுதி

குடியல்வு ஊழியர்களின் பகிஷ்கரிப்பு- முடங்கியது கட்டுநாயக்க விஐபி பகுதி

பிரபுக்கள் பிரிவில் பணியாற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள ஊழியர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணிகளில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இன்று (12) நள்ளிரவு தொடக்கம் மீள் அறிவித்தல் வரை தாம் பணிகளில் இருந்து விலகியுள்ளதாக குடிவரவு குடியகல்வு ஊழியர்கள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு குறித்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவதாக அச்சங்கத்தின் தலைவரின் கையெழுத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று கட்டுநாயக்க விமானநிலையத்தினூடாக முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ மற்றும் அவருடைய துணைவியார் வௌிநாடு செல்ல முற்பட்டதாகவும் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக அவருடைய பயணம் தடை பட்டதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.

basil

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image