அட்டன் சுகாதாரதுறை ஊழியர்களுக்கு எரிபொருள் பற்றாக்குறை!

அட்டன் சுகாதாரதுறை ஊழியர்களுக்கு எரிபொருள் பற்றாக்குறை!

அட்டன் சிபேட்கோ எரிப்பொருள் விநியோக நிலையத்தில் சுகாதார பிரிவினர்க்கான எரிப்பொருள் விநியோகம் நேற்று (01) பிற்பகல் இடம் பெற்றபோதும் வருகைத் தந்திருந்த அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க முடியாது போயுள்ளது.

 வருகை தந்திருந்த சுகாதார ஊழியர்களுக்க விநியோகிக்க போதுமானதாக பெற்றோல் இன்மைக்காரணமாக சுகாரதார ஊழியர்கள் தமது வாகனங்களை பெற்றோல் இல்லாமல் மீண்டும் கொண்டு செல்ல முடியாது பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கினர்.

நீண்ட வரிசையில் இருந்த சுகாதார ஊழியர்களுக்கான எரிப்பொருள் விநியோகம் பிற்பகல் முதல் நடைபெற்று இரவு எரிப்பொருள் தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து சுகாதார ஊழியர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கினர்.

அதனை தொடர்ந்து எரிப்பொருள் பெற்றுக்கொள்ளாத சுகாதர ஊழிர்யகளின் விபரங்களை எரி;ப்பொருள் நிரப்பு நிலையத்திற்கு பெற்றுக் கொடுப்பதற்கு அவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

தமது எரிப்பொருள் நிரப்பு நிலையத்திற்கு 6600லீற்றர் பெற்றோர் கிடைக்க்பபெற்றதாகவும் பிற்பகல் முதல் நாவலப்பிட்டி, கினிகத்தேனை, டிக்கோயா, பொகவந்தலாவை, மஸ்கெலிய ஆகிய பிரதேசங்களில் சேவையாற்றும் வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு தாம் பெற்றோலை பெற்றுக் கொடுத்ததாகவும் அதிகளவான சுகாரதார ஊழியர்கள் பெற்றோலை பெற்றுக் கொள்ள வருகை தந்திந்ததால் இவ்வாறு பெற்றோல் பற்றாக்குறை ஏற்பட்டதாக எரிப்பொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image