இடைநிலை சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

இடைநிலை சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

எரிபொருள் பிரச்சினை காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையை சேர்ந்த 8 தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.

 
நாளையும் இந்தப் பணிப்புறக்கணிப்பு தொடரவுள்ளதாக இடைநிலை வைத்திய சேவை ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
 
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாத நிலை உள்ளது. எரிபொருள் விநியோகிக்கப்பட்டாலும் சுகாதார துறையினர் எரிபொருளை பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கல் நிலவுகிறது.
 
எனவே, துணைநிலை வைத்திய சேவை ஒன்றிணைந்த முன்னணி என்ற அடிப்படையில் 8 தொழிற்துறையினரின் இணக்கப்பாட்டுடன், இன்றும், நாளையும் கடமைக்கு சமூகமளிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், குடும்ப நல சேவை உத்தியோகத்தர், தொழிநுட்பவியலாளர்கள் சங்கம், ஈ.ஈ.ஜி. அதிகாரிகள் சங்கம், பொது ஆய்வுக்கூட நிபுணர்கள் சங்கம், பல் சிகிச்சையாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image