ரயில் சேவைகள் இன்று வழமைப்போல்...

ரயில் சேவைகள் இன்று வழமைப்போல்...

இன்றைய தினம் ரயில் சேவைகள் வழமைப் ​போல இயங்கும் என்று ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.

வழமைப் போன்று அனைத்து ரயில் சேவைகளையும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவைகளும் வழமைப்போல இடம்பெறும் என்று அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

மேலும், இ.போ.ச டிப்போவூடாக தனியார் பஸ்களுக்கு தொடர்ந்தும் எரிபொருள் வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், தனியார் பஸ் போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்த வகையிலேயே இடம்பெறும் என்று தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பஸ் கட்டணம் திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் இன்று (28) இடம்பெறவுள்ளதாகவும் அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image