சுதந்திர வர்த்தக வலய பணிகள் வழமைக்கு!

சுதந்திர வர்த்தக வலய பணிகள் வழமைக்கு!

தமக்கு கீழியங்கும் அனைத்து சுதந்திர வர்த்தக வலயத்தில் அனைத்து நிறுவனங்களும் வழமைக்குத் திரும்பியுள்ளன என்று இலங்கை முதலீட்டுச் சபை அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக் காரணமாக சில பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளபோதிலும் ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிப்பதனால் நிலைமை சீராக உள்ளதாகவும் ஊக்குவிப்புச் சபை தெரிவித்துள்ளது.

BOI அனைத்து தொழிலாளர்களையும் அந்தந்த தொழிற்சாலைகளுக்கு எந்தவித சிரமமும் இன்றி சுமூகமான போக்குவரத்து வசதிகளை உறுதி செய்ய சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருகிறது.

அதேநேரம், BOI நிறுவனங்களுக்கான சுமூகமான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயல்முறைகள் தொடர்பாக இலங்கை சுங்கம் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுகிறோம். தற்போதைய சூழ்நிலையில், சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களாலும் நமது நிறுவனங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதன் மூலம், நமது மதிப்புமிக்க அந்நிய செலாவணி வருமானத்தை நாட்டிற்குள் பெற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம் என்றும் முதலீட்டு ஊக்குவிப்புச்சபை தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image