உயர் கல்வியை தொடரவுள்ள மாணவர்களுக்கு உயர்கல்விக்கான கடன் திட்டம்

உயர் கல்வியை தொடரவுள்ள மாணவர்களுக்கு உயர்கல்விக்கான கடன் திட்டம்

ஏற்றுக்கொள்ளப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பட்டப்படிப்பை தொடர்வதற்கான வட்டியற்ற கடனை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

“Skills – High Education Exhibition @kaluthara – 2022” என்ற பெயரில் இம்மாணவர்களுக்கான கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

2018, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் உயர்தர பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழக வாய்ப்பினை பெறாத மாணவர்களுக்காக இந்த புதிய மாணவர் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகப்பிரிவுகளையும் உள்வாங்கும் வகையில் எதிர்வரும் 28ம் திகதி களுத்துறை மாவட்டச் செயலகத்தில் காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை இக்கடன் வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image