வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்கோரி கொழும்பில் போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்கோரி கொழும்பில் போராட்டம்
2020 சகல வேலையற்ற பட்டதாரிகளுக்கும் உடன் தொழில் வாய்ப்பு வழங்குமாறு கோரி ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கொழும்பில் நேற்று (01) போராட்டம் நடத்தியது.
 
"வாக்குறுதியை நிறைவேற்று" "வெட்டாமல் அனைவருக்கும் தொழில் கொடு!" என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக  ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவானோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
 
கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்த அவர்கள் பின்னர் பேரணியாக ஜனாதிபதி செயலகம் நோக்கி சென்றனர்.  ஜனாதிபதி செயலகம் முன்பாகவும் அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். 
 
247988694_4492435344126958_844999457784076070_n.jpg
 
250762313_4492435227460303_1261702627004435402_n.jpg
 
248341932_4491566870880472_7268120884873658735_n.jpg
 
248412502_4491562677547558_372773725767292873_n.jpg
 
251024281_4491562460880913_3508413470501258214_n.jpg
 
 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image