ஒரு இலட்சம் ரூபாவுக்கும் மேல் சம்பளம் பெறுவோரிடம் வரி அறவிடப்படுமா? அரசின் அறிவித்தல்

ஒரு இலட்சம் ரூபாவுக்கும் மேல் சம்பளம் பெறுவோரிடம் வரி அறவிடப்படுமா? அரசின் அறிவித்தல்

ஒரு இலட்சம் ரூபாவுக்கும் மேல் சம்பளம் பெறுவோரின் சம்பளத்தில் இருந்து 5 % வரி அறவிடும் எந்த எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்ததார்.

இது தொடர்பில் எந்த யோசனையும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்தனவினால் மேற்குறிப்பிட்டவாறு முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய (14) வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஒரு இலட்சத்திற்கும் அதிக சம்பளத்தைப் பெறுகின்றவர்களுக்கு 5 வீத வரி அறவிடுமாறு வர்த்தக்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை அவரது தனிப்பட்ட நிலைப்பாடாகும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image