ஐந்து மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

ஐந்து மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

ஐந்து மாவட்டங்களின் சில பகுதிகள் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.



இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

இதற்கமைய, முல்லைத்தீவு மாவட்டத்தில், செம்மலை கிழக்கு கிராம சேவகர் பிரிவின் நாயாறு மீன்பிடி பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில், மல்விட்ட கிராம சேவகர் பிரிவின் கோலிந்தவத்த இலக்கம் 3ஆம் பிரிவும், இரத்தினபுரி மாவட்டத்தில் பரகல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

காலி மாவட்டத்தில், பழைய கொலனி கிராம சேவகர் பிரிவின் திவித்துர தோட்டமும், மொனராகலை மாவட்டத்தில், ஹிந்திகிவ்ல கிழக்கு கிராம சேவகர் பிரிவின் நக்கலவத்த கிராமமும், மில்லகெலவத்த கிராமமும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image