சிறுவர்களைப் பாதுகாக்க தொழில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை

சிறுவர்களைப் பாதுகாக்க தொழில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை

மலையகத்தைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் குறித்து ஆராய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் பிரஜா சக்தி அபிவிருத்தி செயற்திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

வயது குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள . தொழில் சட்டத்தில் திருத்தத்திற்காக  இவற்றை முன்வைக்கவுள்ளார். இது தொடர்பில் புத்திஜீவிகள் அலோசனைகள் வழங்கலாம் என்றும் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (24) ஹற்றனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கைகளை பிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் குறித்த முறைப்பாடுகளை அறிவிக்கவும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பாதுகாப்புகாப்தற்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்தவிடயத்தில் ஆர்வங்கொண்டுள்ள அனைவரும் ஆலோசனைகளை முன்வைக்கலாம்.

இதற்கான தொலைப்பேசி இலக்கங்கள் 071 555 0666 051 222 2422 என்பதாகும். இந்த இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் பிரஜா சக்தி அபிவிருத்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

எழுத்து மூலமான ஆலோசனைகளை  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின் அஞ்சல் ஊடகவும் ஆலோசனைகளை சமர்ப்பிக் முடியும்.
இதனூடாக 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு எதிராகவும், அச்சுறுத்துக்குள்ளான தொழில்களுக்கு அமர்த்தவதற்கும் அதற்கு சம்மந்தப்பட்ட தரகர்களுக்கு எதிராக அரச உயர் சபைகள் மூலம் நடடிவக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் தோட்ட முகாமைத்துவம் மற்றும் கிராம சேவகரின் ஊடாக அந்தந்த இடங்களில் இருந்து 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் எங்கு வேலைகளுக்கு சென்றுள்ளார்கள் என்ற தகவல்கள் திரட்டப்பட்டு அது குறித்தும் ஆராயப்படும்.

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளில் இடை விலகும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி ,கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் அவர்களுக்கு தேவையான பொருளாதார உதவிககை வழங்கலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக தொண்டமான் தொழில்நுட்ப கல்லூரி ஊடாக இலவச கல்வி வழங்கவும் கண்டி மற்றும் பதுளை ஆகிய பகுதிகளில் இந்த கல்லூரியின் கிளை காரியாலங்களை ஆரம்பிப்பதற்கும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் பிரஜா சக்தி அபிவிருத்தி செயற்திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம் - tamil.news.lk

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image