அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவித்தல்

அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவித்தல்

அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் குறைந்தளவிலான சேவையாளர்களை பணிக்கு அழைக்குமாறு சகல அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகளுடமும் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான குறைந்தபட்ச பணி குழுவினரை சேவைக்கு அழைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அவசியமற்ற முறையில் அரச நிறுவனங்களுக்கு ஊழியர்கள் அழைக்கப்படுவார்களாயின், நடமாட்ட கட்டுபாடு அமுலாகியுள்ள தற்போதைய காலத்தில் அத்தியாவசிய தேவைக்கு அவசியமான குறைந்தபட்ச பணிக்குழாமினை மாத்திரம் சேவைக்கு அழைக்குமாறு அவர்களிடம் கோரியுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.   

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image