தாதியர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கை

தாதியர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கை

கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாதமை காரணமாக இன்று காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அகில இலங்கை தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


தங்களது பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அரியப்படுத்தப்பட்டபோதும் அதற்கு இதுவரையில் தீர்வு வழங்காதமை காரணமாக இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அகில இலங்கை தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

இதற்கமைய இன்று காலை முதல் நாளை காலை வரை சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக சங்கத்தின் செயலாளர் எச்.எம்.எஸ்.பி மெதிவத்த தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image