ஆசிரியர் சேவை எதிர்பார்ப்பிலுள்ள பட்டதாரிகளுக்கு நற்செய்தி

ஆசிரியர் சேவை எதிர்பார்ப்பிலுள்ள பட்டதாரிகளுக்கு நற்செய்தி

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் 81 புதிய தேசிய பாடசாலைகளை ஆரம்பிக்க உள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.

ணுழழஅ தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பிரதான செயலாளர் ரஞ்சித் ஜயகொடி, மாகாண பணிப்பாளர் நாயகம் குரப்புஆராச்சி ஆகியோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

இதற்கமைய, அனைத்து அரச பாடசாலைகளுக்காக அரசாங்கத்தினால், தலா 20 இலட்சம் ரூபா நிதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகவும், பாடசாலைகளின் சீரமைப்பு பணிகளுக்காகவும் இந்த நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாடசாலைகளுக்கான ஆசிரியர் ஆட்சேர்ப்புகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image