பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல்

பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல்

பிலியந்தலை – ஹெடிகம பகுதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியமை தொடர்பிலான விசாரணைகளுக்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெஸ்பேவ பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைந்த வகையில் சேவையாற்றி வரும் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் நேற்று முன்தினம் (16) மாலை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 5,000 ரூபா நிவாரணப் பொதியை பகிர்ந்தளித்துவிட்டு வீடு திரும்பிய போது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image