சுகயீன விடுப்பு போராட்டத்தில் தபால் சேவை ஊழியர்கள்

சுகயீன விடுப்பு போராட்டத்தில் தபால் சேவை ஊழியர்கள்

தபால் திணைக்கள ஊழியர்கள் நேற்று (30) நள்ளிரவு தொடக்கம் சுகயீன லீவு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

தபால் சேவைக்கு புதிய ஊழியர்களை உள்வாங்கல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைதொடர்பு சேவைகள் சங்கத்தின் தலைவர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு ஆரம்பிக்கப்பட்ட போராட்டமான இன்றைய தினம் (31) நள்ளிரவு வரை 24 மணி ​நேரத்திற்கு முன்னெடுக்கப்படும் என்றும் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்டப்டுள்ளது. தபால் திணைக்களத்தின் இத்தீர்மானத்தையடுத்து விடுமுறை ரத்து செய்யப்பட்டபோதிலும் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image