தொழிற்சங்கங்களை ஒழுங்குப்படுத்த திட்டம் அவசியம்- தொழில் அமைச்சர்

தொழிற்சங்கங்களை ஒழுங்குப்படுத்த திட்டம் அவசியம்- தொழில் அமைச்சர்

​தொழிற்சங்க செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் திட்டமொன்றை செயற்படுத்த அவசியம் உள்ளதாக தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தினூடாக தொழிற்சங்கங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க தொழிற்சங்க சாசனத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் இதன்போது அமைச்சர் சுட்ிக்காட்டியுள்ளார்.

தம்புள்ள பிரதேசத தொழில் காரியாலயம் ஒன்றை திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொழிற்படையில் 35 வீதமானவர்கள் பெண்களாவர், எனவே தொழிற்சங்கங்களில் அவர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டும். அத்துடன் தொழிற்சங்கங்களை அரசியல்மயமாக்கலில் இருந்து விடுபட வேண்டும். இல்லையெனில், தொழிற்சங்கங்களுக்கு இடையிலான மோதல்கள் தீர்க்க முடியாத சிக்கல்களை உருவாக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image