'ஆயிரம்' கனவு நிறைவேறியது?

'ஆயிரம்' கனவு நிறைவேறியது?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் என்ற நாளாந்த வேதனத்தை வழங்குவதற்கு, இன்று (08) கூடிய வேதன நிர்ணயசபை முடிவு செய்துள்ளதாக தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

?பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 900 ரூபாவும், வரவு-செலவுத்திட்ட சலுகைக் கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்குவதற்கான யோசனையை தொழில் ஆணையாளர் முன்வைத்தார்.

இதற்கு முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் எதிர்ப்பை வெளியிட்டநிலையில், இந்த தொகைக்காக இடம்பெற்ற வாக்கெடுப்பில் பெரும்பாலானோர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இந்த நிலையில், இதற்கான வர்த்தமானி அறிவிப்பு ஒருவாரத்தில் வெளியாக்கப்படும் என்றும் தொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image