2020 O/L பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு 23 முதல் தடை

2020 O/L பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு 23 முதல் தடை

2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையை முன்னிட்டு மேலதிக வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வு என்பனவற்றை நடத்துவதற்கு எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மாதிரி வினாப்பத்திரம் அச்சிடுதல், விநியோகித்தல் முதலானவையும் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை மார்ச் மாதம் 01 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image