பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,000 ரூபா சம்பள உயர்வுக்கு ஆட்சேபனை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,000 ரூபா சம்பள உயர்வுக்கு ஆட்சேபனை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

கிடைத்துள்ள ஆட்சேபனைகள் தொடர்பில் பரிசீலிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆட்சேபனை தெரிவிப்பதற்கு இன்று (15) நண்பகல் 12 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த ஆட்சேபனைகள் தொடர்பில் அடுத்த வாரத்தில் சம்பள நிர்ணய சபை கூடி ஆராயவுள்ளது. இதன்பின்னர் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பு யோசனையை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

மூலம் : Newsfirst.lk/tamil

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image