பட்டதாரிகளுக்கு மற்றொரு வாய்ப்பு!

பட்டதாரிகளுக்கு மற்றொரு வாய்ப்பு!

நாடு முழுவதும் உள்ள விதாதா வள நிலையங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு பயிலுநர் பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

பிரம்பு, பித்தளை, மண், பலகைப் பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழுள்ள பிரதேச செயலகங்களை உள்வாங்கும் வகையில் விதாதா வள நிலையங்கள் அல்லது பிரிவுகள் நிறுவப்பட்டு வருகின்றன. கிராமிய கைத்தொழிலை நம்பியிருப்போருடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான சுயதொழில் அபிவிருத்தி திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் அவர்களுக்கான தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொடுத்தல் போற்றவற்றுக்கு துறைசார் நிபுணர்கள் அவசியமாயுள்ளனர்.

எனவே வெற்றிடங்கள் உள்ள விதாதா நிலையங்களுக்கு விஞ்ஞான பட்டதாரிகளை இணைக்க அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சு நேற்று (18) தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image