16 வயது வீட்டுப் பணிப்பெண் மரணம்: புதிய பிரேத பரிசோதனைக்கு உத்தரவு

16 வயது வீட்டுப் பணிப்பெண் மரணம்: புதிய பிரேத பரிசோதனைக்கு உத்தரவு

மரணித்த வீட்டுப் பணிப்பெண்ணான 16 வயது சிறுமியின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து புதிய பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதான குறித்த சிறுமி மரணித்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் குறித்த சிறுமியை பணிக்கு அமர்த்திய தரகர் ஆகியோரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், குறித்த வீட்டில் பணிபுரிந்த 22 வயது யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனின் மைத்துனரையும் எதிர்வரும் மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image