நாட்டில் 100,000 இற்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

நாட்டில் 100,000 இற்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

இலங்கையில் இன்றைய தினம் வரையில் 100,000 இற்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவினால் இலங்கைக்கு 500,000 ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் ( Oxford AstraZeneca Covishield) தடுப்பூசிகள் கடந்த 28ஆம் திகதி வழங்கப்பட்டன.

இதையடுத்து கடந்த 29ஆம் திகதி முதல் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டன.

முன்னிலைப் பணியாளர்களான சுகாதாரத்துறையினர், பாதுகாப்புத் தரப்பினர் ஆகியோருக்கு தற்போது தடுப்பூசி செலுத்தம் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இன்றைய தினம் 23,217 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த 5 நாட்களில் 118,767 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.Vaccine.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image