தமிழகத்தில் முழு நேர ஊரடங்கு அமுல்படுத்த உத்தரவு

தமிழகத்தில் முழு நேர ஊரடங்கு அமுல்படுத்த உத்தரவு

தமிழகத்தில் மே 10ம் திகதி முதல் மே 24ம் திகதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. ஒருநாளுக்கு இந்தியாவில் கொரோனாவால் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது..

இந்நிலையில் தமிழகத்திலும் தற்போது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மே 10ம் திகதி காலை 4 மணி முதல் மே 24ம் திகதி காலை 4 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் பின்வருமாறு:

• மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளை தவிர இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன.

• முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.

• நியாய விலைக்கடைகள் 12 மணி வரை செயல்படும்.

• மளிகை, காய்கறி என அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் நண்பகல் 12 மணி மட்டுமே திறக்க அனுமதி

• அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.

• உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் தொடர்ந்து அனுமதி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image