பட்டதாரி பயிலுநர்கள் 329 பேருக்கு நிரந்தர நியமனம்

பட்டதாரி பயிலுநர்கள் 329 பேருக்கு நிரந்தர நியமனம்

2019ஆம் ஆண்டு பயிலுநர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட 329 பட்டதாரிகளுக்கு இன்று (17) நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

மலையக பிரதேசங்களை சேர்ந்த பட்டதாரிகளுக்கே இந்நியமனங்கள் வழங்கப்பட்டன.

மத்திய மாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மேற்படி வைபவத்தில் பிரதம விருந்தினராக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

தற்போதைய சுகாதார நிலைமையைக் கருத்திற்கு மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 50 பேர் மட்டும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image