குறைகேள் பிரிவுக்கு பொறுப்பிலிருந்து பிம்சானி நீக்கம்

குறைகேள் பிரிவுக்கு பொறுப்பிலிருந்து பிம்சானி நீக்கம்

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள பிம்சானி ஜாசிங்க ஆராச்சி குறைகேள் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்ததுள்ளது

பொலிஸ் திணைக்களத்தை மீள கட்டமைக்கும் செயற்பாடுகளுக்கு அமைய பொலிஸ் மா அதிபரால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், விரைவில் ஜா சிங்க ஆராச்சிக்கு வேறு ஒரு பதவி வழங்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிம்சானி ஜா சிங்க ஆராச்சியின் கீழ் குறித்த ஒம்பூட்ஸ்மன் பிரிவில் சேவையாற்றிய ஏனைய அதிகாரிகளையும், வேறு ஒரு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் கடமைகளை முன்னெடுக்க பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image