சவூதி அரேபியாவில் இலங்கையருக்கு வேலை வாய்ப்பு

சவூதி அரேபியாவில் இலங்கையருக்கு வேலை வாய்ப்பு

சவூதி அரேபியாவில் ஆரம்பிக்கப்படவுள்ள பாரிய நிர்மாணத் திட்டங்களில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்நாட்டில் உள்ள தகுதி வாய்ந்த நிபுணர்களின் தகவல்களை சேகரிக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் மூலம் கட்டிடக் கலைஞர்கள், பொறியியலாளர்கள் மற்றும் அளவு சர்வேயர்களுக்கு பல வேலை வாய்ப்புகள் உருவாகலாம் என்றும் பணியகம் அறிக்கையில் கூறுகிறது.

சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவை இலங்கைத் தொழில் வல்லுநர்களுக்கு அந்த வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக சவூதி அரேபியாவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, அந்த வேலைகளில் ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த இலங்கையர்கள் தங்கள் தகவல்களை சமர்ப்பிக்கலாம் மற்றும் அவர்கள் ஊஏ களை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் பணியகத்தின் தரவு வங்கியில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பணியகத்தின் 24 மணி நேர தகவல் மைய ஹாட்லைன் எண் 1989ஐ அழைப்பதன் மூலம் இந்த வேலைகளுக்கான பதிவு மற்றும் கூடுதல் தகவல்களைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image