இலங்கையில் இருந்து நேரடி விமானசேவைக்குத் தடை- குவைத்

இலங்கையில் இருந்து நேரடி விமானசேவைக்குத் தடை- குவைத்

இலங்கையில் கொவிட் 19 தொற்று அதிகரித்து வரும் நிலையில் குவைத் இலங்கை நேரடி விமானசேவைகளுக்க தடை விதித்துள்ளது.

இலங்கை மாத்திரமன்றி, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் நேரடி வர்த்தக விமானசேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சரக்கு விமானங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் குவைத் சிவில் போக்குவரத்துக்குக்கான தலைமையகம் அறிவித்துள்ளது என அந்நாட்டு செய்தி சேவை அறிவித்துள்ளது.

குவைத்துக்குள் நுழையும் குறித்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் மூன்றாவது நாடொன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கவேண்டும் என்றும் அதிக தொற்று அபாயம் உள்ள நாடுகளை பட்டியல்படுத்தப்பட்டதையடுத்து அந்நாட்டு சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைய இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கொவிட் 19 இற்கு எதிரான நடவடிக்கை நேற்று குவைத் அமைச்சரவையில் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image