சுற்றுலா விசாவில் மலேசிய தொழில்வாய்ப்புக்காக செல்ல முயன்ற 9 பேர்

சுற்றுலா விசாவில் மலேசிய தொழில்வாய்ப்புக்காக செல்ல முயன்ற 9 பேர்

சுற்றுலா விசா மூலம் மலேசியாவுக்கு தொழில்வாய்ப்புக்காக செல்ல முயன்ற 9 பேர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

கட்டுநாயக்க விமான நிலைய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

 

நேற்றைய தினம், 14 பேர் மலேசியா நோக்கி பயணிக்க இருந்த நிலையில், அவர்களில், நான்கு பெண்களும், ஐந்து ஆண்களும் அடங்களாக 9 பேர் சுற்றுலா விசா மூலம் தொழில்வாய்ப்புக்காக செல்ல முயற்சித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து, அவர்கள் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image