இஸ்ரேலில் இறந்த இலங்கைப் பெண் இதுவரை அடையாளங்காணப்படவில்லை

இஸ்ரேலில் இறந்த இலங்கைப் பெண் இதுவரை அடையாளங்காணப்படவில்லை

இஸ்ரேல் மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் இலங்கை பெண்ணின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை காலை இஸ்ரேலில் இடம்பெற்ற வன்முறையின் போது திருமதி அனுலா ரத்நாயக்க என அடையாளம் காணப்பட்ட பெண் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் உறுதிப்படுத்திய போதிலும், சடலம் அடையாளம் காணப்பட்டு உறுதி செய்யப்பட்ட பின்னரே அதனை உறுதிப்படுத்த முடியும்” என தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

எனவே அதுவரை குறித்த நபர் காணாமல் போனவராக அறியப்படுவார். அந்தந்த பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண உதவுமாறு இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

"இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் இராணுவ நடவடிக்கைகள் இருப்பதால், அந்தப் பகுதியை இராணுவம் பாதுகாத்த பின்னரே, பரிசோதனை மற்றும் அடையாள நோக்கத்திற்கான அணுகலைப் பெறுவோம்," என்று அவர் கூறினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image