ருமேனியாவில் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள்- இலங்கையர்களுக்கு வாய்ப்பு

ருமேனியாவில் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள்- இலங்கையர்களுக்கு வாய்ப்பு

ருமேனியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும் இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் இளைஞர் யுவதிகள் வாய்ப்பு நாடி விண்ணப்பிக்க முடியும் என்றும் இலங்கைக்கான ருமேனிய தூதுவர் விக்டர் சியுஜ்டியா தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலக அறிக்கையினூடாக இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ருமேனியாவில் பல பல்தேசிய கம்பனிகள் முதலீடு செய்துள்ளமையினால் இவ்வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அக்கம்பனிகளில் ஆயிரக்கணக்கான தகவல் தொழில்நுட்பம் சார் விசேட தகமையுடையவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 7ம் திகதி ருமேனிய தூதுவருக்கும் பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று அலரி மாளிகையில் இடம்பெற்றபோது தூதுவர் இவ்விடயத்தை தெரிவித்தார் என்றும் பிரதமர் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் ஒரு பரிமாற்ற விஜயத்தின் கீழ், உயர் கல்வித் துறையில் ஒத்துழைப்பைப் பற்றி விவாதிப்பதற்காக, இலங்கை கல்வியாளர்கள் குழு விரைவில் ருமேனியாவுக்குச் செல்லவுள்ளது.

பிரதமர் குணவர்தன மற்றும் ரோமானிய தூதுவர் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பதற்காக இலங்கையுடன் தமது நாடு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடவுள்ளதாகவும், இதன் மூலம் வர்த்தகச் செயற்பாடுகள் சுமூகமாக அமையும் எனவும் தூதுவர் சியுஜ்டியா தெரிவித்தார் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image