ரஷ்ய படையினரால் தடுத்து வைக்கப்படிருந்த இலங்கை மாணவர்கள் மீட்பு

ரஷ்ய படையினரால் தடுத்து வைக்கப்படிருந்த இலங்கை மாணவர்கள் மீட்பு

உக்ரேனின் கார்கிவ் பிரதேசத்தில் ரஷ்ய படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 இலங்கை மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் உக்ரேன் ஜனாதிபதி வொலொதிமிர் செலெஸ்கி ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் ரஷ்ய படையினரின் ஆக்கிரம்பின் போது கார்க்கிவ் பிரதேசத்தில் குறித்த 7 மாணவர்கள் ரஷ்ய படையினரிடம் சரணடைந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உக்ரேன் ஜனாதிபதி, ரஷ்ய படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட சிவிலியன்கள் மீட்கப்பட்டனர் என்றும் அவர்களில் 7 இலங்கையர்கள் உள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார்.

இம்மாணவர்கள் குப்யன்ஸ்க் என்ற மருத்துவ கல்லூரியில் கற்று வந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image