சட்டரீதியாக பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் கவனத்திற்கு...

சட்டரீதியாக பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் கவனத்திற்கு...

வௌிநாடுகளில் இருந்து சட்டரீதியாக வங்கிகளுக்கு பணம் அனுப்பி நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுத் தரும் புலம்பெயர் தொழிலாளர்கள் மின்சாரத்தினால் இயங்கும் வாகனத்தை கொள்வனவு செய்வதற்கான அனுமதியை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் இன்று (31) வௌியிடப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் இச்சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த புலம்பெயர் தொழிலாளர்கள் மின்சாரத்தில் இயங்கக்கூடிய இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக அவ்வனுமதியை பயன்படுத்த முடியும்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image