கடவுச்சீட்டு வழங்க விசேட அலுவலகம்!

கடவுச்சீட்டு வழங்க விசேட அலுவலகம்!

வௌிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்று அவசரமாக வௌிநாடு செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு விரைவில் கடவுச்சீட்டை வழங்குவதற்கு விசேட அலுவலகப்பிரிவினை திறக்கவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை தொடக்கம் இப்புதிய பிரிவு செயற்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமை காரணமாக வௌிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே கடவுச்சீட்டை பெறுவோரின் தேவைக்கமைய பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் அவசரமாக கடவுச்சீட்டுக்களை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 2 மாதங்களாவது காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வௌிநாட்டு தொழில் வாய்ப்பினை நாடி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக புதிய அலுவலக பிரிவு ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image