கனடாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் - அமைச்சரவை அனுமதி!

கனடாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் - அமைச்சரவை அனுமதி!

கனடாவில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வலுவூட்டல் வாய்ப்புகளை வழங்குவதற்காக இலங்கையில் தன்னார்வ ஒத்துழைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) மீண்டும் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கனடாவில் உள்ள உலக பல்கலைக்கழக சேவையானது, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பின்தங்கிய பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரமளிக்கும் வாய்ப்புகளை வழங்குவதற்காக 30 ஆண்டுகளாக இலங்கையில் தன்னார்வ ஒத்துழைப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இரு தரப்பினருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 வருடங்களாக இலங்கையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கனடாவில் உள்ள உலக பல்கலைக்கழக சேவையுடன் 2020 - 2027 காலப்பகுதிக்காக இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பிரதமரினால் முன்வைக்கப்பட்ட குறித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன் குறித்த திட்டத்தின் கீழ் 2.76 மில்லியன் கனேடிய டொலர்10 அரச மற்றும் அரச சார்ப

அதன்படி, 10 அரசாங்கங்களின் கீழ் உரிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதமரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அத்துடன் கனேடிய $2.76 மில்லியன் மானியகளுடன் கூடிய அரச சார்பற்ற நிறுவனங்களில் இவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image