நாடு திரும்புவோரின் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் சில மணி நேரங்களில்

நாடு திரும்புவோரின் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் சில மணி நேரங்களில்

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் விருந்தகங்களில் தனிமைப்படுத்தும் நடவடிக்கை, ஜனாதிபதியின் தலையீட்டை அடுத்து நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பும் இலங்கையர்கள் உட்பட சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவு கிடைக்கும் வரையில், அவர்களை விருந்தகங்களில் தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கைகளின் அடிப்படையில் குறித்த காலப்பகுதிக்கு மாத்திரம் அதிகளவான கட்டணம் அறவிடப்படும் மோசடி தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டது.

இதற்கமைய, குறித்த செயற்பாட்டை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு சில மணி நேரங்களில் பீ.சி.ஆர் பரிசோதனை அறிக்கை கிடைக்க கூடிய வகையில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image