சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்

சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்

,சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து நாடு கடத்தப்பட்ட 24 இலங்கையர்கள் இன்று (31) இலங்கை வந்தடைந்தனர்.

சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

 2012, 2013ம் காலப்பகுதியில் இருந்து குறித்த இலங்கையர்கள் குடிவரவு சட்டங்களை மீறி அந்நாடுகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர் என்றும் நீதிமன்றில் ஒப்படைத்த பின்னர் அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் தெரிவிக்கப்படுகிறது.

பெண் உட்பட 20 பேர் ஜெர்மனியில் இருந்தும் நால்வர் சுவிட்சர்லாந்தில் இருந்தும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

 பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்த அவர்களை குடிவரவு குடிகழ்வு திணைக்களம் தனிமைப்படுத்தல் நடைமுறைக்காக இராணுவத்தினரிடம் கையளித்துளளது. தனிமைப்படுத்தல் நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர் குறித்த நபர்கள் புலனாய்வு பிரிவினரிடம் சட்ட நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்படவுள்ளனர் என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image