கொவிட் நோயாளர்களுக்கு வீடுகளில் சிகிச்சையா? PHI சங்கம் விடுக்கும் எச்சரிக்கை

கொவிட் நோயாளர்களுக்கு வீடுகளில் சிகிச்சையா? PHI சங்கம் விடுக்கும் எச்சரிக்கை

கொவிட்-19 தொற்றுறுதியானவர்களை வீடுகளிலேயே வைத்து சிகிச்சையளிக்கப்படுமாயின், அது பிரச்சினைகளை ஏற்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில், நோய் அறிகுறிகளை வெளிகாட்டாதவர்களை, வீடுகளிலேயே தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியரர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே நேற்று முன்தினம் (15) தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், போதுமானளவு உட்கட்டமைப்பு வசதிகள் காணப்படாவிடின், அதனூடாக பிரச்சினை எழக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன நேற்று (16) தெரிவித்துள்ளார்.  இந்த யோசனை முன்வைக்கப்பட்ட சகல சந்தர்ப்பங்களிலும் தமது தரப்பிலிருந்து சில கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. அத்துடன், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் போக்குவரத்து பிரச்சினைகள் காணப்படுவதோடு, தொடர்ந்தும் பழைய வாகனங்களே பயன்படுத்தப்படுகின்றன.
 
இதேவேளை, வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றவர்களுக்கு, அவசர தேவைகளுக்கு வழங்குவதற்கான போதிய மருந்து பொருட்களும் வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இல்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

மூலம் - சூரியன் எவ் எம் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image